states

img

ஆர்எஸ்எஸ் முன்னிறுத்தும் இந்துத்துவா தேசியவாதம் அரசமைப்பிற்கும் ஜனநாயகத்துக்கும் எதிரானது

மலப்புறம், ஜுன் 13- ஆர்எஸ்எஸ் முன்வைக்கும் இந்துத் துவா தேசியவாதம் அரசமைப்பிற்கும் ஜன நாயகத்திற்கும் எதிரானது என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கூறினார். காங்கிரஸ் உட்பட பிரதான எதிர்க்கட்சிகளுக்கு இந்துத்துவா படைகளைச் சமாளிக்கத் தெரியாது அல்லது முடியவில்லை. ஆனால், கேரளாவில் இடது சாரி அமைப்பு சக்திவாய்ந்ததாக இருப்ப தால் இந்துத்துவா சக்திகளை எதிர்க்க முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ‘இஎம்எஸ்-இன் உலகம்’ தேசிய கருத்தரங்கில் ‘சங்பரிவார் தேசியத்தின் சதிக்குழிகள்’ என்னும் தலைப்பில் பிரகாஷ் காரத் பேசினார். அப்போது அவர், தேசத்தி ற்கு மதம், சாதி மற்றும் இனம் ஆகியவற்று டன் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இந்துக்கள் வலுவாக இருந்தால்தான் தேசி யம் வளரும் என ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது. இது முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலு க்கு அழைப்பு விடுப்பதாகும். 2019 ஆம் ஆண்டில், ஆட்சிக்கு வந்த பாஜக தலைமை யிலான ஒன்றிய அரசு இந்துத்துவ அரசை நிறுவும் நகர்வுகளை வலுப்படுத்தியது. இதற்கு உதாரணம் குடியுரிமைச் சட்ட திருத்தமும் காஷ்மீரை பிளவுபடுத்திய தும். குடியுரிமை மதத்தின் அடிப்படையி லானதாக மாற்றப்பட்டது. நாட்டின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமாக காஷ்மீர் இருந்தது. அதை பிள வுபடுத்தி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசம் உருவாக்கப் பட்டது. ஒன்றிய அமைச்சராக இருந்த அப்பாஸ் நக்விக்கு மீண்டும் வாய்ப்பு வழங் கப்படவில்லை. அதிகாரத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் முஸ்லிம்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். சிறுபான்மையி னரை அடக்குவதற்கும் இந்துத்துவா தேசிய வாதத்தை வளர்ப்பதற்கும் அடிமட்டத்தில் முயற்சி வலுவடைகிறது. இது ஆர்எஸ்எஸ், சங் பரிவாரின் இயல்பு. இதோடு நாம் ஒரு போதும் சமரசம் செய்துகொள்ள முடியாது, என்று பிரகாஷ் காரத் கூறினார்.