தில்லியில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட ஓரிரு நாள்களில் (ஜூன் 24) முன்னதாகவே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் விசாவதர் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் தலைவர் சக்திசிங் கோஹில் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேற்கு வங்கத்தின் நைடா மாவட்டத்தில் உள்ள காளிகஞ்சில் திங்கள்கிழமை பிற்பகல் நடந்த குண்டுவெடிப்பில் சிறுமி ஒருவர் கொல்லப்பட்டார். காளிகஞ்ச் சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள முருதேஷ்வர் கோவிலில் ஆடைக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்ததாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலில் இருந்து முதற்கட்டமாக 160 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். அவர்கள் அனைவரும் ஜோர்டான் வழியாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததற்காக மகளை தந்தை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.