தரிசனத்திற்கு வரும் பக் தர்கள் கொரோனா தடுப் பூசி சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்ற அறி விப்பு அதிகாரப்பூர்வமா னது அல்ல. இணைய தளத்தில் தவறுதலாக பதி விடப்பட்டுள்ளது என திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.
பகுதிநேர ஆசிரியர் களை நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மதிமுக பொதுச்செயலா ளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
மொராக்கோவில் உள்ள காசாபிளாங்காவில் உள்ள ஏய்ன் போர்ஜா மருத்துவமனையில் ஹலிமா சிஸ்சே என்ற பெண்ணுக்கு ஒரே பிர சவத்தில் 9 குழந்தைகள் (5 பெண், 4 ஆண்) பிறந்து உள்ள நிலையில், இந்த சம்பவம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபரும், நடிகரு மான ரூசோ ரஞ்சித்தை பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் வட கிழக்கு பகுதியில் ஒமைக் ரான் கொரோனா வைர ஸின் துணை வகையான எக்ஸ்.எக்ஸ்.பி (XXB) வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரத்தை ஒப்பி டுகையில் 7% அதிகமாக பரவியுள்ளது. இதனால் எக்ஸ்.எக்ஸ்.பி பாதிக்கப் பட்டவர்களின் எண் ணிக்கை 18% அதிகரித் துள்ளது.
ஜப்பானின் கடலோரப் பகு திகளில் கடும் பனிப் பொழிவால் நீகாட்டா மாகாணத்தில் 6000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது
உத்தரகண்ட் சட்டப்பேர வையில் நிறைவேற்றப் பட்ட கட்டாய மதமாற்ற தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மதமாற்ற தடை சட்டம் மசோதா சட்டமாக மாறி யுள்ளது. ஆளுநரின் ஒப்பு தலையடுத்து கட்டாய மதமாற்ற தடை சட் டத்தை விரைவில் அமல் படுத்த உத்தரகண்ட் பாஜக அரசு திட்டமிட் டுள்ளது.
பீகார் மாநிலம் ரக்சால் என்ற இடத்தில் செங்கல் சூளை வெடிப்பு ஏற்பட்டு 13 பேர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் 9 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் ஆபத் தான நிலையில் உள்ள தாக எஸ்ஆர்பி மருத்துவ மனை தகவல் தெரிவித் துள்ளது.
கொரோனா சிகிச்சைக் காக 72,000 படுக்கை களும், 3 மாதங்களுக்கு தேவையான மருந்து களும் தயார் நிலையில் உள்ளது. அதனால் மக்கள் யாரும் அச்சம் கொள்ளவேண்டாம் என சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.
பாஜகவில் அண்ணா மலை இணைந்த பின் வீடியோ, ஆடியோ கலாச்சாரம் பெருகி விட்டது என பாஜகவிலி ருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரிரகுராம் புகார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடுகளுக்கான மனித உரிமை அமைப்பு, சிறை யில் அடைக்கப்பட்டுள்ள பெருவின் முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டில்லோவைச் சந்தித்துள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அவரது முடிவை எதிர்த்து, நாடாளுமன்றத்தில் பெரும் பாலான கட்சிகள் இணைந்து அவரை பதவியிலிருந்து நீக்கின. அவரது செயல்பாடுகளை முடக்க 18 மாத சிறைத்தண்டனையையும் விதித்து சிறையிலும் அடைத்திருக்கிறார்கள். அவரது விடுதலை மற்றும் நாடாளுமன்றத்திற்கு உடனடித் தேர்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
பல நாட்கள் நிலையற்ற தன்மையோடு இருந்த பிஜியின் அரசி யல் சூழலில் யார் புதிய பிரதமர் என்ற கேள்விக்கான விடை கிடைத்திருக்கிறது. சிடிவேனி ரபூகா புதிய பிரதமராகத் தேர்வு செய்யப் யட்டுள்ளார். ரகசிய வாக்கெடுப்பில் அவருக்கு 28 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தற்போதைய பிரதமரான பிராங்க் பைனிமராமா வுக்கு 27 வாக்குகளும் கிடைத்தன. இதன் மூலம் 2006 ஆம் ஆண்டில் கலகம் மூலமாக ஆட்சிக்கு வந்து, 18 ஆண்டுகள் தொடர்ந்து பிரத மராக இருந்த பைனிமராமாவின் ஆட்சி நிறைவுக்கு வருகிறது.
கனடாவில் துருவக் கரடிகளின் எண்ணிக்கை பெரும் வேகத் தில் வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண் கரடிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கனடாவின் ஆர்க்டிக்கின் தென்முறையில் வாழ்ந்து வந்த துருவக் கரடிகள் வேகமாக மறைந்து வருகின்றன. விமானம் மூலம் பறந்து, சர்ச்சில் நகரை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தி ருக்கிறார்கள். மிக பிரபலமான சுற்றுலாத்தலமான சர்ச்சில் நகரம், உலகின் துருவக்கரடிகளின் தலைநகர் என்று அழைக்கப்படுகிறது.