மதுரை, மே 30- தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க கை ரேகை பதிவுக்கு பதில், கண் கருவிழி பதிவின் அடிப்படையில் பொருட் கள் வழங்கப்படும் என உண வுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வயலில் வேலை பார்ப்பதால் சில ருக்கு கைரேகை பதிவாவதில் சிக் கல் இருக்கிறது. இந்த நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, சோதனை முயற்சியாக கருவிழி சரி பார்ப்பு முறை மூலம் ரேசன் பொருட் கள் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தவர்களுக்கு பதிலாக சம் பந்தப்பட்ட நபர் யாரை தெரிவிக்கி றாரோ அந்த நபரின் பெயரை ரேசன் கடையில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் மாற்று நபர்கள் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். மேலும், ரேசன் கடைகளில் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக தமிழ கம் முழுவதும் உள்ள 286 குடோன் களில் இருந்து கொண்டு செல்லப் படும் அரிசி மூட்டைக்கு குறியீடு எண் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகவும்; ரேசன் அரிசி கடத்தலில் யார் ஈடுபட்டாலும் கடு மையான நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் எச்சரிக்கை விடுத் துள்ளார்.