states

ஆட்டோ மீட்டர் கட்டணம்: நுகர்வோருடன் அரசு ஆலோசனை

சென்னை,மே 13- இலங்கைக்கு தமிழகத்தில் இருந்து முதல் கட்டமாக வருகிற 16ஆம்  தேதி (திங்கட்கிழமை) நிவாரணப்  பொருட்கள் அனுப்பி வைக்கப்படு கிறது.  சென்னை துறைமுகத்திலிருந்து கப்பலில் அரிசி, மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள இந்தியா, சீனா உட்பட பல்வேறு நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன என்றாலும் மக்களின் துயரம் நீங்குவதற்கு இன்னும்  சில நாட்கள் தேவைப்படும் என்று நிபு ணர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் இலங்கை மக்க ளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்து உதவுவதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வந்துள்ளார். இலங்கை மக்களுக்கு ரூ. 80 கோடி மதிப்புள்ள 40 டன் அரிசி,  ரூ. 28 கோடி மதிப்புள்ள 137 வகை  மருந்துகள், ரூ. 15 கோடி மதிப்புள்ள  500 டன் பால் பவுடர் ஆகியவை  வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது. இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஒன்றிய அரசும் இதற்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட  குழுவை தமிழக அரசு அமைத்துள் ளது. அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் எஸ்.பிரபாகர், ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையன், மருத்துவப் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் தீபக்  ஜோசப் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு இலங்கைக்கு தமிழக  அரசு சார்பில் நிவாரணப் பொருட்களை  அனுப்பும் பணியை மேற்கொண்டு வரு கிறது. தற்போது நிவாரணப் பொருட்களை பார்சல் செய்யும் பணிகள்  தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பார்சலில் “தமிழ்நாட்டு மக்களிட மிருந்து அன்புடன்” என்று அச்சிடப் பட்டுள்ளது. முதல் கட்டமாக 10 ஆயிரம் டன் அரிசி  மற்றும் பால் பவுடர், மருந்து வகைகள்  கொண்டு செல்லப்பட உள்ளது. அதன் பிறகு மீண்டும் 22ஆம் தேதி 2ஆவது கட்டமாக இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.