states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் ஞாயி றன்று மதியம் 4.3 ரிக்டர் அளவில், 10 கி.மீ ஆழத்தில்  நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில நடுக்கவியல் மையம்  (என்சிஎஸ்) தெரி வித்துள்ளது. மிதமான நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, சொத்து சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.

“உக்ரைன் - ரஷ்யா மோத லில் நேட்டோ உறுப்பின  நாடுகளின் பங்கேற்பு மறைமுகமாக இருந்தா லும், உக்ரைனுக்கு தொடர்ந்து பல்லாயிரம் பில்லியன் டாலர்களை ஆயுதங்களாக அனுப்பு கிறார்கள். நேட்டோ உறுப்பு நாடுகள் உக் ரைன் - ரஷ்யா மோதலில் பங்கேற்பதற்கு தனி  குறிக்கோள் உள்ளது. அது, முன்னாள் சோவி யத் யூனியனையும் அதன் அடிப்படைப் பகுதியான ரஷ்ய கூட்டமைப்பையும் கலைப்பதுதான்” என ரஷ்ய ஜனாதிபதி விளாடி மிர் புடின் பேசியுள்ளார். 

தில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவை சிபிஐ பிப்ரவரி 26 ஞாயி றன்று கைது செய்தது. தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் மனிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்துள் ளது. 8 மணி நேரம் அவரி டம் நடத்தி விசாரணை க்குப் பின்னர்  இந்த நட வடிக்கையை மேற் கொண்டுள்ளது.  இந்த வழக்கில் இதுவரை 9  பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

பிப்ரவரி 28 முதல் மார்ச் 2-ஆம் தேதி வரை மேற்கு இமயமலைப் பகுதியில்  லேசானது முதல் மித மான மழை, பனிப் பொழிவு இருக்கும் என வும், வடகிழக்கு மாநில பகுதியில் ஐந்து நாட் களுக்கு மழை பெய்யக் கூடும் என இந்திய வானி லை ஆய்வு மையம் அறி வித்துள்ளது.

ஐரோப்பா நாடான போர்ச் சுக்கலில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, உயர் பணவீக்கத்திற்கு எதிராக ஆயிரக்கணக் கான மக்கள் தலைநகர் லிஸ்பனின் தெருக்களில் போராட்டம் நடத்தினர். கடந்த ஆண்டு 50%க்கும் அதிகமான தொழிலாளர் கள் மாதத்திற்கு ஆயிரம் டாலருக்கும் (1,054) குறைவாகவே சம்பாதித்  துள்ளனர் எனவும், அத்தி யாவசிய பொருட்களின் விலைகள் 18.7% அதி கரிப்பைக் கண்டது என  அந்நாட்டு அரசு தரவு களில் தகவல் வெளியாகி யுள்ளது.

அமெரிக்காவில் பணி நீக்கம் நாளுக்குநாள் அதி கரித்து வரும் நிலையில், தனது உணவகத்தில் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும் 100 ரோபோக்களையும் பணி நீக்கம் செய்யவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறி வித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே நப்பேடு கிராமத் தில் புதிதாக அமைக்கப் பட்ட செப்டிக் டேங்கில் விழுந்த 9 வயது சிறுமி மண்மூடி பலியானார்.

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடார் நாட்டில் கடுங்குற்றங் களை செய்த 2,000 குற்றவாளிகளை ஒரே சிறையில், ஒரே நாளில் அடைக்கப்பட்டனர்.