மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கார் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் ஐ.சி.யு வார்டில், மாடு ஒன்று சுற்றித்திரியும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கார் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் ஐ.சி.யு வார்டில் மாடு ஒன்று, அங்கு இருக்கும் குப்பை தொட்டியில் உள்ள மருத்துவ கழிவுகளை சாப்பிடுகிறது. அங்கு சுற்றித்திரியும் மாட்டை வெளியேற்ற ஒருவரும் இல்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், மருத்துவமனையில் பணியிலிருந்த வார்டு பாய் மற்றும் பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.