states

img

கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர், பொருளாளர் ராஜினாமா!

பெங்களூருவில் நடைபெற்ற ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர், பொருளாளர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
பெங்களூருவில் நடந்த ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாத்தின் போது சின்னசாமி மைதானத்திற்கு அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக ஆர்சிபி அணி, நிகழ்வு மேலாண்மை நிறுவனமான டிஎன்ஏ பொழுதுபோக்கு நெட்வொர்க்குகள், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் உட்பட இன்னும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று கர்நாடக கிரிக்கெட் சங்கச் செயலாளர் சங்கர் மற்றும் பொருளாளர் ஜெயராம் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்தனர்.