ஆக்டிவ் சிம் கார்டு இல்லாமல் வாட்ஸ் அப் இயங்காது ஒன்றிய அரசு அறிவிப்பு
உலகின் முக்கிய அரட்டை மற்றும் தகவல் (குறுஞ்செய்தி, வாய்ஸ் கால், வீடியோ கால்) பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப் (WhatsApp) பயன்பாட்டிற்கு ஒன்றிய அரசு புதிய கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், “செல்போனில் ஆக்டிவ் சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ் அப் கணக்கு இயங்காது. இந்த விதிமுறை டெலி கிராம் (Telegram), சிக்னல் (Signal) போன்ற செயலிகளுக்கும் பொருந்தும். மொபைலில் உள்ள சிம் கார்டு, அந்தந்த செயலிகளில் இணைக்கப்பட்டிருப்பதை 90 நாட்களுக்கு ஒரு முறை சம்பந்தப் பட்ட செயலி உறுதி செய்ய வேண்டும். அதே போல வாட்ஸ் அப் வெப் இல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தானா கவே லாக் அவுட் (Logout) ஆகும். செயலற்ற சிம் கார்டுகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் சைபர் குற்றவா ளிகளை கட்டுப்படுத்தவே இந்த புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது” என ஒன்றிய அரசு விளக்கம் அளித் துள்ளது.
