states

ரூ.12,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்

ரூ.12,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்

மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய  நகரான தானேவில் கைதான   நபர் கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தெலுங்கானா மாநிலம்  ஹைதராபாத் அருகே செர்ல்லப்பள்ளி யில் ரசாயன தொழிற்சாலையில் காவல்  துறையினர் (மகாராஷ்டிரா) சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில்  போலியாக செயல்பட்டு ரசாயன தொழிற்  சாலையில் ரூ.12,000 கோடி மதிப்பிலான 32,000 லிட்டர் “எம்டி” ரக போதை திரவம்  பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து  நாடு முழுவதும் பெரிய போதைப்பொருள்  நெட்வொர்க் ஒன்றை ஏற்படுத்திய ஐஐடி  பட்டதாரி உட்பட 13 பேர் கைது செய்யப்  பட்டனர்.