மகாராஷ்டிராவில் மாணவர் - வாலிபர் சங்கம் உரிமைப் பேரணி
மகாராஷ்டிரா மாநிலத்தில் பழங்குடி மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிக் குறைபாடுகளை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்க வேண்டும். அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தானே-பால்ஹர் மாவட்டக் குழு ஷாபூரில் உரிமைப் பேரணி சென்று பழங்குடியினர் திட்ட அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.