tamilnadu

img

தீவிர டெங்கு ஒழிப்புப்பணி தொடக்கம்

தீவிர டெங்கு ஒழிப்புப்பணி தொடக்கம்

நாமக்கல், அக்.22- டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், திருச்செங்கோட்டில் தீவிர டெங்கு ஒழிப்புப்பணி துவங்கப் பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் விட்டு விட்டு கன மற்றும் மிதமான தூரல் மழை பெய்து கொண்டே இருகிறது. மழைநீர் தேங்கினால் டெங்கு கொசுக்கள் வளரும் என்கிற அபாய நிலை இருப்பதால், திருச்செங்கோடு நகராட்சி சார் பில் பொதுமக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையில் பிரச்சார நிகழ்ச்சி நகரில் உள்ள 33 வார்டு களிலும் புதனன்று நடைபெற்றது. இதில் முதல் துவக்கமாக 25 ஆவது வார்டு வட்டப்பாரை பகுதியில் திருச்செங்கோடு நகர் மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில், நகர துப்புரவு அலுவலர் சோழராஜ் மற்றும் 0கொசு ஒழிப்பு பணியா ளர்கள் வீடு வீடாகச் சென்று தண்ணீர் வைத்துள்ள தொட்டி களில் கொசு புழுக்கள் இருக்கிறதா என பார்த்து சோதனை செய்து வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் புகை மருந்து அடிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொ ழியை நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு வாசிக்க பொது மக்கள் ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 25ஆவது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரி உலகநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.