states

85 லட்சம் இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

85 லட்சம் இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இளநிலை நீட் நுழைவுத் தேர்வு, யுஜிசி நெட் தேர்வு என வரிசை யாக ஒன்றிய மற்றும் மாநில அரசு கள் நடத்தும் தேர்வுகளின் வினாத்தாள் கசிந்து வருவதால் 85 லட்சம் மாணவர் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது என மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி வெளி யிட்டுள்ள பதிவில்,”வினாத்தாள் கசிவு என்பது மாணவர் மற்றும் இளைஞர்க ளுக்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான சக்கர வியூகம் ஆகும். வினாத்தாள் கசிவால் நேர்மையாக படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு நிச்சயமற்ற நிலைமை ஏற்பட்டு, மன அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இளைஞர்கள், மாணவர்க ளின் கடின உழைப்பின் பலனையும் மிக மோசமான அளவில் பறிக்கின்றது. கடின உழைப்பைவிட நேர்மையின்மை சிறந்தது என்ற தவறான செய்தியையும் அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடி யாதது.

அடுத்தடுத்த கசிவுகள்  அரசின் தோல்வி

நீட் வினாத்தாள் கசிவு நாட்டையே உலுக்கி ஓராண்டுகூட ஆகவில்லை. போ ராட்டத்துக்கு பிறகு புதிய சட்டத்தை கொண்டு வந்து, அதுதான் தீர்வு என்று பின்புறம் ஒளிந்துகொண்டது ஒன்றிய அரசு. ஆனால், அடுத்தடுத்த வினாத்தாள் கசிவுகள் அரசின் தோல்வியை நிரூ பித்துள்ளன. அனைத்து அரசியல் கட்சிக ளும் மாநில அரசாங்கங்களும் வேறு பாட்டை மறந்து ஒன்றாக இணைந்து வலு வான முன்னெடுப்பை எடுத்தால் மட்டுமே இதனை ஒழிக்க முடியும். தேர்வுகளின் கண்ணியத்தைப் பராமரிப்பது நமது மாணவர் மற்றும் இளைஞர்களின் உரிமை. எந்த விலை கொடுத்தேனும் அதனை கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும்” என ராகுல் காந்தி கோ ரிக்கை விடுத்துள்ளார்.