states

மேற்கு வங்கத்தில் குண்டுவெடிப்பு

மேற்கு வங்கத்தில் குண்டுவெடிப்பு

 மேற்கு வங்கத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலை யில், பாங்கரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பால் பதற்றமான சூழல் ஏற் பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் பாங்கர் பகுதி யில் உள்ள சல்தபேரியா கிராமத்தில் புதன்கிழமை இரவு ஒரு வீட்டில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என்றும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்த லுக்காக வெடிகுண்டு தயாரிக்கும் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் அனை வரும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என நவ்ஷாத் சித்திக் தலைமையிலான ஐஎஸ்எப் (Indi an Secular Front) கட்சி குற்றம் சாட்டி யுள்ளது.