ஆர்எஸ்எஸ்-ஐ பாராட்டி அஞ்சல் தலை பொய்ச் செய்தி பரப்பிய பாஜக தலைவர்கள்
புதுதில்லி ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நெதர்லாந்து அரசு அஞ்சல் தலை வெளி யிட்டதாக ஒரு புகைப் படத்தை பாஜக தலைவர்கள் சமூக வலைதளங்களில் பரப்பினார்கள். இது திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய் என தற்போது அம்பலமாகி யுள்ளது. இந்துத்துவா மதவாதக் கருத்துக்களை பரப்பி வன்முறை களைக் கட்டவிழ்த்து வருகிற ஆர் எஸ்எஸ் அமைப்பு நூறாண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை கவுரவித்து “100 ஆண்டுகள் தன்ன லமற்ற சேவை” என்ற வாசகத்து டன் நெதர்லாந்து அரசு அஞ்சல் தலையை வெளியிட்டதாக பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் எக்ஸ் கணக்கில் ஒரு படம் வெளியிடப்பட்டது. அதேபோல பாஜகவின் சமூக ஊடகப் பிரிவின் தலைவர் அமித் மாள்வியா, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ப்ரீத்தி காந்தி, ரமேஷ் நாயுடு நாகோத்து போன்ற பல பாஜக தலைவர்கள் இதே படத்தை பகிர்ந்துள்ளனர். இது குறித்து எந்த உண்மை சரிபார்ப்பும் இன்றி பாஜக ஆதரவு ஊடகங்களும் நெதர்லாந்து அரசு ஆர்எஸ்எஸ் அமைப்புக்காக அஞ்சல் தலைகளை வெளியிட்ட தாகத் தவறான செய்திகளை வெளியிட்டன. உண்மை சரிபார்ப்பு இந்நிலையில் உண்மை சரி பார்ப்புத் தளமான ஆல்ட் நியூஸ் செய்த ஆய்வில், நெதர்லாந்து அரசு ஆர்எஸ்எஸ் அமைப்புக்காக அஞ்சல் தலைகளை வெளி யிட்டதற்கான எந்த ஒரு அதிகாரப் பூர்வ அறிவிப்போ செய்தியோ இல்லை என்ற உண்மை வெளி வந்துள்ளது. அவர்களே உருவாக்கிய அஞ்சல் தலை பாஜக மற்றும் பாஜக ஆதரவு ஊடகங்கள் பரப்பிய புகைப் படத்தை ஆய்வு செய்தபோது, அதில் ஆர்எஸ்எஸ்-இன் சர்வதேச பிரிவான இந்து ஸ்வயம்சேவக் சங் அறக்கட்டளை என்பதை டச்சு மற்றும் ஆங்கில வார்த்தைகளில் (“Stichting Hindu Swayam sevak Sangh”) ஒரு வங்கிக் கணக்குப் பெயரைக் குறிப்பிடப் பட்டிருந்தது. தங்களுக்கு வேண்டிய அஞ்சல் தலைகளை எப்படி ஆர்டர் செய்வது, கப்பல் கட்டணம் பற்றிய விவரங்கள் மற்றும் அதற்கான மின்னஞ்சல் முகவரியும் அதில் கொடுக்கப் பட்டிருந்தது. நெதர்லாந்தின் அஞ்சல் சேவை நிறுவனமான போஸ்ட்என்எல் (PostNL), மக்கள் தாங்கள் விரும் பும் எந்தப் படத்தையும் பதிவேற்றி, தனிப்பயனாக்கப்பட்ட (Person alised) அஞ்சல் தலைகளை உரு வாக்கும் வசதியை வைத்துள்ளது. இதன் மூலம் அஞ்சல் தலையை நெதர்லாந்து அரசு வெளியிடவில்லை. மாறாக ஆர் எஸ்எஸ் அமைப்பின் நெதர்லா ந்து நாட்டின் சர்வதேசப் பிரிவான இந்து ஸ்வயம்சேவக் சங் அறக் கட்டளையே அஞ்சல் தலையை உருவாக்கி வெளியிட்டுவிட்டு, நெதர்லாந்து அரசு வெளி யிட்டதாக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் பொய்ப் பிரச்சா ரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் என்பது அம்பலமானது.