பீகார்,ஜூன் 11- பீகாரில் சிறுநீரகத்தை வரதட்சணையாக கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் தனது கணவனுக்கு சீறுநீரக பிரச்சனை இருந்ததை மறைத்து திருமணம் செய்ததாகவும் திருமணத்திற்கு பிறகு சிறுநீரகத்தை வரதட்சணையாக கேட்டு மாமியார் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்துவதாக பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் முசாபூர் மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண்ணின் கணவர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.