states

img

புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பியதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்!

பாட்னா, மார்ச் 6 - புலம்பெயர் தொழிலாளர் விவ காரத்தில், ஒன்றிய பாஜக அரசு இது வரை எடுத்த அக்கறை என்ன? புலம் பெயர் தொழிலாளர் நலனில் பாஜக-வின் பங்குதான் என்ன? என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவரும் பீகார் துணைமுதல்வருமான தேஜஸ்வி கேள்வி எழுப்பியுள்ளார். பாட்னாவில் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்திருக்கும் பேட்டியில் தேஜஸ்வி மேலும் கூறி யிருப்பதாவது: பீகார் மாநிலத்தில் யாரோ ஒருவர் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண் டால் அதை ஒட்டுமொத்த மாநிலத்துக்கு மான பொதுக்குணமாக அடையாளப் படுத்தக் கூடாது. அங்கொன்றும் இங்கொன்றுமான சம்பவங்களின் அடிப்படையில் பொதுவான அனு மானங்கள் கூடாது. இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தால் அவற்றை பீகார் அரசும் சகித்துக்கொள்ளாது. தமிழ்நாடு அரசும் சகித்துக்கொள்ளாது.  

பீகார் மாநிலத் தொழிலாளர் களுக்கு எதிராக எந்த தாக்குதலும் நடை பெறவில்லை என தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் என்னிடம் அளித்த தகவலில் உறுதிப்படுத்தினார். இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது  வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாக எழுந்த புகார்களை மறுத்து தமிழ்நாடு டிஜிபி வெளியிட்ட அறிக்கையையும் நான் சட்டப்பேரவையில் வாசித்தேன். மேலும், முழுமையாக விசாரிக்க பீகார் மாநில அரசு சார்பில் 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவை தமிழ்நாட்டிற்கு அனுப்பினோம். தமிழ்நாட்டுக்கு சென்றுள்ள பீகார் அதிகாரிகள் விரி வாக ஆய்வு செய்துள்ளார்கள். அதேநேரம், புலம்பெயர் தொழி லாளர்கள் நலன் சார்ந்த இந்த விவ காரத்தில் மத்தியில் ஆட்சியிலும், மாநி லத்தில் எதிர்க்கட்சியாகவும் உள்ள பாஜக-வின் பங்கு குறித்து விவாதிக்க வேண்டும். இரு மாநிலங்கள் தொடர்புடைய இவ்விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசு இதுவரை எந்த  அக்கறையும் காட்டியதாகத் தெரிய வில்லை. தமிழ்நாடு பாஜக தலைவரே, பீகார்  பாஜக தலைவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, தங்கள் மாநி லத்தில் (தமிழ்நாட்டில்) புலம்பெயர்  தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான தகவல்களை மறுத்திருக் கிறார் என்பது பத்திரிகையில் வெளி யாகி உள்ளது. பாஜக செய்தித் தொடர் பாளர் தவறான தகவல்களை, ஆத்திர மூட்டும் வார்த்தைகளை டுவிட்டரில் வெளியிட்டது தொடர்பாக வழக்கு பதிவாகி உள்ளதாகவும் தகவல் வெளி யாகி இருக்கிறது. இதற்கு, பாஜக நிச்சயம் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு தேஜஸ்வி குறிப்பிட்டுள்ளார்.