மகாராஷ்டிராவில் 843 பெண் தொழிலாளர்கள் கர்ப்பப்பை அகற்றம்
ஊதிய இழப்பைத் தவிர்க்க அதிர்ச்சிகரமான முடிவுக்கு சென்ற துயரம்
மோடி பிரதமராக ஆன பின்பு நாட்டில் வறுமை மிக மோச மான அளவில் வாட்டி வருகிறது. அதானி, அம்பானி உள்ளிட்ட தனது நண்பர்களின் நலன்களுக்காக மோடி பணியாற்றி வருவதால், பணக்காரர்கள் மேலும் பணக்கா ரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறிவிட்டனர். குறிப்பாக வறுமைக்கோடு அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இத்தகைய சூழலில் பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊதிய இழப்பைத் தவிர்ப்பதற்காக 843 பெண் தொழிலாளர்களுக்கு கர்ப்பப் பையை அகற்றிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப்பிரதேசம், தமிழ்நாட் டைப் போன்று மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் கரும்பு விவசாயம் மிக முக்கியமானது ஆகும். ஒரு வருடத்தில் 78,000 பெண்கள் உட்பட 1.75 லட்சம் தொழிலாளர்கள் கரும்பு அறு வடையில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி காலத்தில் மகாராஷ்டிராவின் பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் பீட் மாவட்டத்தின் கரும்பு வயல்களில் வேலை செய்ய வருகின்றனர். 6 மாதங்கள் வேலை செய்த பிறகு டிசம்பர், ஜனவரி மாதங்களில் அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புகின்றனர். இந்நிலையில், பீட் மாவட்டத் தில் 30 முதல் 35 வயதுடைய 843 பெண்கள் கரும்பு அறுவடை வேலைக்குச் செல்வதற்காகவும், ஊதிய இழப்பைத் தவிர்ப்ப தற்காகவும் தங்களது கருப்பையை அகற்றியுள்ளனர். இதுதொடர்பாக மாநில சுகாதாரத்துறையின் அறிக்கை மூலம் வெளியான தகவ லில், கரும்பு அறுவடை வேலைக்கு முன்பும் பின்பும் பெண்கள் சுகாதா ரத் துறையினரால் முழுமையான உடல் பரிசோதனை செய்யப்படு கின்றனர். இதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் தான் 843 பெண் தொழிலாளர்க ளுக்கு கர்ப்பப்பை அகற்றப்பட்ட அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வெளி யாகியுள்ளன. பிரசவம் மற்றும் மாத விடாய் காரணமாக வேலைக்குச் செல்லாமல் விடுப்பு எடுக்க நேர்ந்தால் வருவாய் குறையும் என்பதால் பெண்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும் 1,523 கர்ப்பிணி தொழி லாளர்கள் ஊதியம் பறிபோய் விடும் என்ற அச்சத்துடன் அரிவாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்க ளை கையில் வைத்துக் கடின மான சூழ்நிலைகளில் கரும்பு வயல் களில் வேலை செய்துள்ளனர். இந்தப் பெண்கள் அனைவரும் தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு போர்டில் பதிவு செய்யப் பட்டுள்ளனர். குறிப்பாக கரும்பு அறுவடை வேலைக்குச் செல்லும் பெண் தொழிலாளர்கள் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளை எதிர்கொண் டுள்ளனர். எடுத்துக்காட்டாக, 3,415 பெண்கள் பி-12 மற்றும் போலிக் அமிலக் குறைபாட்டால் இரத்தச் சோகையால் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் பலர் தலசீமியா, மாதவிடாய் சம்பந்தப் பட்ட பிரச்சனைகள், அறுவை சிகிச்சை அல்லது பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதா ரத்துறை குழுக்கள் 1,132 கிராமங்க ளில் பணியாற்றி, கரும்பு அறு வடைக்குச் சென்ற 46,231 பெண் களை பரிசோதித்துள்ளன. அவர்களின் சுகாதார அட்டைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. 15,624 அரசு மருத்துவர்களின் அனுமதியுடன் 279 அறுவை சிகிச்சைகள் தனி யார் மருத்துவமனைகளில் செய் யப்பட்டுள்ளன.