states

img

டாக்சி சேவை நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிக்க மோடி அரசு அனுமதி

டாக்சி சேவை நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிக்க மோடி அரசு அனுமதி

ஓலா, உபர் உள்ளிட்ட டாக்சி  சேவைகள் மற்றும் ரெபிடோ உள் ளிட்ட பைக் டாக்சி சேவைகள் பெருநகரங்களில் மக்களால் தினம்தோ றும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரு கிறது.  இந்நிலையில், வாடகை வாகன நிறு வனங்களுக்கான திருத்தப்பட்ட வழி காட்டுதல்களை ஒன்றிய சாலை போக்கு வரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், ஓலா, உபர் நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் கட்டணம் வசூ லிப்பதற்கான உச்சவரம்பு 1.5 மடங்கில் இருந்து 2 மடங்காக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரி யான காரணமின்றி, பயணத்தை ஓட்டுநர் கள் ரத்து செய்தால், அவர்களிடம் இருந்து அதிகபட்சம் ரூ.100 அபராதமும், சரியான காரணமின்றி பயணிகள் பய ணத்தை ரத்து செய்தாலும் இதே போல்  ரூ.100 வரை அபராதக் கட்டணம் வசூலிக்கவும் ஒன்றிய சாலைப் போக்கு வரத்து அமைச்சகம் அனுமதி அளித் துள்ளது.