சிபிஐ இயக்குநருக்கு உடல்நலக்குறைவு
மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) இயக்குநராக இருப்பவர் பிரவீன் சூட். இவர் சனிக்கிழமை அன்று தெலுங்கானா மாநிலம் நந்தியால் மாவட்டம் ஸ்ரீசைலம் பகுதிக்கு சென்றார். தனிப்பட்ட பயணமாக சென்ற பிரவீன் சூட் ஹைதராபாத் சிபிஐ அலுவலக அதி காரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், ஸ்ரீசைலத்தில் இருந்து ஹைதராபாத் திரும்பிய போது பிரவீன் சூட்டிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரவீன் சூட் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவ ருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.