states

மின்சார உரிமைப் பறிக்கும் மசோதா

திருவண்ணாமலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில குழு கூட்டம் நவம்பர் 15, 16, 17 தேதிகளில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் தமிழக அரசியல் நிலைமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது,  2024ல் நடக்க உள்ள தேர்தலில், தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து  தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும், அதற்கான பணியை இப்போதிலிருந்தே தொடங்குவது குறித்தும் முடிவு செய்யப்பட்டது.  ஒன்றிய மோடி அரசாங்கத்தின் நாசகர கொள்கைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. வருகின்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மின்சார சட்டத் திருத்த மசோதா 2022-ஐ நிறைவேற்றுவதற்கான முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது.

அச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டில் மின்சாரம் பயன்படுத்தும் மக்களின் அடிப்படை உரிமையே தட்டிப் பறிக்கப்படும் ஆபத்து உள்ளது. மின்சார வாரியத்தையே தனியாரிடம் தாரை வார்க்கும் நிலைமை உருவாகும். அவர்கள் நினைத்தபடி கட்டணத்தை உயர்த்தி நிர்ணயித்துக் கொள்ளும் நிலை ஏற்படும். தமிழ்நாட்டில் இலவச மின்சாரம் பெறுகிற ஏராளமான விவசாயிகள் இருக்கிறார்கள். அது பறிக்கப்படும் ஆபத்து உருவாகும். எனவே மின்சார மசோதாவை எதிர்த்து வலுவான இயக்கங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். கவர்னர் சட்ட வரம்புகளை மீறி, ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கைகளை பேசி வருகிறார். பா.ஜக, ஆளாத மாநிலங்களில்,  மாநில அரசுக்கு எதிராக கவர்னர் கருத்துகளை கூறி போட்டி அரசியல் நடத்தக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.  தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும் என குடியரசு தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., வரி உயர்வு, அரிசி, அப்பளம், ஊறுகாய் போன்ற பொருட்களுக்கும் வரி விதிப்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.    இப்பிரச்சனைகளை முன்னிறுத்தி, டிசம்பர் கடைசி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் தமிழகத்தின் முக்கிய  நான்கு மையங்களில் பெருந்திரள் கூட்டம் நடத்தி, பொதுமக்களிடையே விளக்குவது என முடிவு செய்துள்ளோம்.  ஒன்றிய அரசு அலுவலகங்களில் இந்தி செல் அமைக்கக்கூடாது என தமிழகத்திற்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதை செயல்படுத்த தீவிரமாக உள்ளது. இதை அகற்றிட வேண்டும் என வலியுறுத்தப்படும்.  மழை காலங்களில் ஏற்படும் பாதிப்பை தடுக்க ஏரிகளைத் தூர்வாருவது உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்பெண்ணை – பாலாறு இணைக்க, 270 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி செயல்படுத்தாமல் உள்ளது.  திருவண்ணாமலைக்கு பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், தீப திருவிழாவிற்கும் வருகின்றனர். கோவில் விழாக்களில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக, கொடி கட்டுவது, இறை நம்பிக்கையை தனக்கு சாதகமாக பயன்படுத்துவது என அரசியல் நிகழ்ச்சியாக்க முயற்சிக்கின்றனர். இறை நம்பிக்கை உள்ள லட்சக்கணக்கான மக்களிடம், தங்களுடைய அரசியல் லாப நிகழ்ச்சிகளுக்கு கோவில் நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது.  

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி இல்லை, புதியதாக ஆட்களை  ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது, இவை ஆபத்தை விளைவிக்கும். வேலை வாய்ப்பு உருவாக்க முதல்வர் திட்டம் அறிவித்தும், அவற்றை மதிப்பூதியம், தொகுப்பூதியம் என அனுமதிக்கக் கூடாது.பால் விலை உயர்வு சாதாரண மக்களை பாதிக்கும்.  பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்று, ஏற்கனவே, வழங்கப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதிக்கக் கூடாது.  இட ஒதுக்கீட்டின்படி பலன் பெறாதவர்கள் பயனடையும் வகையில்,  பத்து சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவது தொடர்பாக ஆணையம் அமைத்து அதன் வழிகாட்டுதலின்படி செயல்படுத்திட வேண்டும்.