ஒரு தடுப்பூசி கூட போடாத குழந்தைகள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ஆவது இடத்தில் இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான தடுப்பூசி தொடர்பான லான்செட் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கை நேற்று(புதன்னன்று) வெளியானது.
204 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நிமோனியா, போலியோ, அம்மை போன்ற உயிருக்கு ஆபத்தான 11 நோய்களிலிருந்து குழந்தைகளை காக்கும் முக்கிய தடுப்பூசிகளில், ஒரு தடுப்பூசி கூட போடாமல் இந்தியாவில் மொத்தம் 14.4 லட்ச குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலில், நைஜீரியாவில் ஒரு தடுப்பூசி கூட போடாத குழந்தைகள் 25 லட்சம் பேர் இருப்பதால் அந்நாடு முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கிறது.
உலகளவில் தடுப்பூசி போடப்படாத 1.57 கோடி குழந்தைகளில். பாதிக்கும் மேற்பட்டவர்கள் 8 நாடுகளில் மட்டுமே வசித்து வருவதாகவும் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் 53% பேர் மற்றும்தெற்காசியாவில் 13% பேர் இருப்பதாகவும் லான்செட் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.