ஈரானின் செயற்கைக் கோளை கசகஸ்தான் தளத்திலிருந்து ரஷ்ய ராக்கெட் ஒன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. ரிமோட்சென்சிங் செயற்கைக் கோளான இதற்கு ‘கயாம்’ என்று பெயரிட்டுள்ளனர். சுற்றுச்சூழலை கண்காணிக்க இதில் அதி தெளிவு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சேகரிக்கப்படும் தரவுகள் வேறெந்த நாட்டிற்கும் அளிக்கப்படாது என்றும் அவை குடிமைச் செயல்பாடுகளுக்கே பயன்படுத்தப்படும் என்று ஈரான் கூறியுள்ளது.