science

img

ஆக்ஸியம் 4 திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரர்!

ஆக்ஸியம்-4 திட்டத்தின் மூலம் 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவை பலரும் வாழ்த்தி வருகின்றனர்
ஆக்ஸியம் 4 திட்டத்தின் மூலமாக 14 நாட்கள் ஆய்வு செய்வதற்காக இந்தியரான சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் சர்வதேச விண்வெளி மையத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்கா, புளோரிடாவிலிருந்து ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்த டிராகன் விண்கலம் சுமார் 28 மணி நேரத்தில் விண்வெளியை மையத்தை அடையும்.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா இந்திய விமானப் படையில் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். பின்னர் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்காக ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள யூரி ககாரின் விண்வெளிப் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டார். 
இந்நிலையில் தற்போது இவருக்கு ஆக்ஸியம்-4 திட்டத்தில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்மூலம் 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார்