internet

img

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை குறிவைக்கும் ஸ்ட்ராண்ட்ஹாக் மால்வேர்

ஸ்ட்ராண்ட்ஹாக் என்ற மால்வேர் மூலம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சர்வர்கள், ஊடுற, ஸ்மார்ட்போன்களை தாக்கி செயலிழக்கச் செய்யவும், தகவல்களை திருடவும் மால்வேர் எனப்படும் நாசவேலை செய்யும் சாஃப்ட்வேர்கள் உருவாக்கப்படுகின்றன. செக்கோஸ்லோவேகியா நாட்டில் ஏராளமானோரின் வங்கிக் கணக்குகளில் தன்னிச்சையாக பணம் குறைந்துவந்ததை அடுத்து, அதன் பின்னணியில் ஸ்ட்ராண்ட்ஹாக்(StrandHogg) மால்வேரின் கைவரிசை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள், வங்கி கணக்கு விவரங்களை திருடும் புதிய ஸ்ட்ராண்ட்ஹாக் (StrandHogg) மால்வேரிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அனைத்து மாநில அரசுகளும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

இது போன்ற கேடு விளைவிக்கும் சாஃப்ட்வேர்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள்,அவர்களின்  வங்கி கணக்கு விவரங்களை திருட, ஸ்ட்ராண்ட்ஹாக் (StrandHogg) என்ற மால்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மால்வேர், ஆண்ட்ராய்டின் அனைத்து பதிப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.  ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து நாம் பயன்படுத்திவரும் சுமார் 500 செயலிகளை, இந்த மால்வேர் தாக்கி தகவல்களை திருடிவருகிறது. போட்டோ, வீடியோ, மைக் வசதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் ஸ்ட்ராண்ட்ஹாக் மால்வேர், நமது அந்தரங்க தகவல்களை திருடவும், ஒட்டுக் கேட்கவும் ஹேக்கர்களுக்கு உதவுகிறது. 

மேலும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், வாட்ஸ்அப்  போன்ற செயலிகளை மீண்டும் நுழைய சொல்லி குறுக்குவழியில், இந்த மால்வேர் ஸ்மார்ட்போன்களில் புகுந்துவருகிறது. ஏதேனும் லிங்க்குகள் திறக்கவில்லை என்றால், ஆப்கள் மூலம் அனுமதி தாருங்கள் என கேட்கும் மால்வேர், நமது சம்மதத்துடன் உள்ளே நுழைந்து உளவு பார்க்க ஆரம்பிக்கிறது. எனவே, தெரியாத செயலிகளை கவனமாக டவுன்லோடு செய்தலும், செயலிகள் கேட்கும் அனைத்திற்கும் கண்ணை மூடிக்கொண்டு அனுமதி கொடுக்காமல் இருத்தலுமே இந்த ஆபத்தில் இருந்து நம்மை காத்துக்கெள்ள முடியும்.