தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் அப்பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
இன்று காலை 9 மணியளவில் தில்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஹரியானாவை மையமாகக் கொண்டு 10 கி.மீ ஆழத்தில் உருவான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வுகள் மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.