இந்தியாவில் மோசடி செய்து வெளிநாடு தப்பி ஓடிய 15 தொழிலதிபர்களால் ரூ.58,000 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
நேற்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய தொழிலதிபர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி எழுத்துப்பூர்வ பதிலளித்தார்.
அதில் விஜய் மல்லையா, நீரவ் மோடி, நிதின் ஜே சந்தேசரா, சேத்தன் ஜே சந்தேசரா, திப்தி சி சந்தேசரா, சுதர்சன் வெங்கட்ராமன், ராமானுஜம் சேஷரத்தினம் உள்ளிட்ட 15 பேர் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்களால் 58,000 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் சொத்துக்களை முடக்கியதன் மூலம் வெரும் 33% பணம் மட்டுமே திரும்ப பெறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.