districts

img

புத்தக தின விழா

கும்பகோணம், ஏப்.28-கும்பகோணம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில்உலக புத்தக தின விழா நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் நா.தமிழ்செல்வி வரவேற்றார். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வட்ட செயலாளர் பழஅன்புமணி தலைமைவகித்தார். சீவன் என்ற தலைப்பில் வழக்கறிஞராக பயின்று வரும் க.ராமன் உரையாற்றினார். தாமுஏகாச மாவட்ட தலைவர் சாஜீவபாரதி எசப்பாட்டு நூல் பற்றி பேசினார். இந்திய மாணவர் சங்கம் நகர செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார். தமுஎகச சங்க நகர செயலர் அசோக்குமார், பொறுப்பாளர்கள் ராஜகோபாலன் பக்கிரிசாமி வெங்கடேசன் கலைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;