சிபிஎம் கொடிக் கம்பங்கள் அகற்றும் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்!
உயர்நீதிமன்றத்தில் சிபிஎம் மேல்முறையீடு
சென்னை, ஜூன் 23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பங்களை அகற்றுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இரண்டு நீதிபதிகள் அமர் வில், மேல்முறையீடு செய்யப்பட்டுள் ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பங்களை அகற்றும் அர சின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட் டது. இம்மனு நீதிபதி சி. சரவணன் முன்பு 20.06.2025 அன்று விசாரணைக்கு வந்தபோது தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு திங்களன்று (23.06.2025) அவசர வழக் காக விசாரிக்க வேண்டுமென மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் இதனை ஏற்றுக் கொண்டு விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டுள்ளனர். எனவே, இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அரசியல் கட்சிகளின் கொடிக்கம் பங்கள் அகற்றப்படுவதை எதிர்த்து, இரண்டு நீதிபதிகள் அமர்வு முன்பு ஏற்கெனவே தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் இதனை தமது அறிக்கையில் தெரி வித்துள்ளார்.