ஈரானுக்கு உதவத் தயார் – புடின்
மாஸ்கோ, ஜூன் 23- ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ரஷ்ய ஜனாதிபதி புடின் உடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது, இஸ்ரேன் மீதான அமெ ரிக்காவின் தாக்குதல் நியாயமற்றது என புடின் கண்ட னம் தெரிவித்துள்ளார். மேலும் ஈரான் மக்களுக்கு ரஷ்யா உதவ தயாராக இருப்பதாகவும் அறிவித் துள்ளார். ஈரான் ரஷ்யாவின் முக்கிய நட்பு நாடாகும். 2025 ஜனவரி மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ராணு வம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஒப்பந்தம் கையெழுத்தாகி யுள்ளது. எனினும் நேரடி ராணுவ உதவிகளுக்கான ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகவில்லை. ஈரான் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்திய இரண்டாவது நாளில் அந்நாட்டின் வெளி யுறவுத்துறை அமைச்சர் ரஷ்ய ஜனாதிபதியை சந் தித்துள்ளார். இந்த சந்திப்பில் புடின், அமெரிக்காவை கண்டித்ததுடன் ஈரான் நடத்திய தாக்குதல்கள் தற்காப்பு நடவடிக்கை என ஈரானுக்கு தனது முழு ஆதரவை யும் தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யாவின் பங்கிற்கு ஈரான் மக்களுக்கு உதவ அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக வும் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா உதவிகள் செய்யும் என வாக்குறுதி கொடுத்திருந்தாலும் அது ராணுவ உதவியா, அல்லது எத்தகைய உதவி என வெளிப்படை யாக இரண்டு நாட்டின் தரப்பிலும் தெரிவிக்கப்பட வில்லை. ஈரானுக்கு என்ன தேவை என்பதைப் பொறுத்து ரஷ்யா உதவிகள் செய்யும் என ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.