தமிழகத்தில் 9 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்!
சென்னை, ஜூன் 23- தமிழகத்தில், திருப்பூர், பெரம்பலூர், நாமக்கல், விருது நகர், மதுரை, திருச்சிராப் பள்ளி, ஈரோடு, சிவகங்கை, செங்கல்பட்டு ஆகிய 9 மாவ ட்ட ஆட்சியர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் ஆட்சியராக- ஜெயசீலனுக்கு பதில் சுக புத்ரா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெயசீலன் சென்னை மாநகராட்சி சுகா தார இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். செங் கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பெரம்பலூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட் டுள்ளார். அதேபோல திருப் பூர் ஆட்சியராக நாரணவ ரேவும் திருச்சிராப்பள்ளி ஆட்சியராக சரவணனும் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சிய ராக பிரவீன்குமார், ஈரோடு மாவட்ட ஆட்சியராக கந்த சாமி, சிவகங்கை ஆட்சிய ராக பொற்கொடி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்ட ஆட்சி யர் உமா சிறப்புத் திட்டச் செய லாக்கத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உயர் கல்வித்துறை செயலாளராக சங்கர் நியமனம் செய்யப் பட்டுள்ளார். வணிகவரித் துறை செயலாளராக ஷில்பா பிரபாகர் நியமிக்கப்பட்டுள் ளார்.