ஈரான் மீதான அமெரிக்கா குண்டுவீச்சு ஐ.நா. சாசனங்களுக்கு எதிரான அத்துமீறல்!
இடதுசாரிக் கட்சிகள் கண்டனம்
புதுதில்லி, ஜூன் 23- ஈரான் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருப்பதற்கு இடதுசாரிக் கட்சிகள் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் து. ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) கட்சி பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச் சார்யா, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச் சார்யா மற்றும் அகில இந்திய பார் வர்ட் பிளாக் பொதுச்செயலாளர் தேவ ராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை வருமாறு: மேற்காசியாவில் அதிகரிக்கும் பதற்றம் அமெரிக்கா, ஈரான் மீது குண்டு வீசித் தாக்குதல் தொடுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது ஈரானிய இறையாண்மை மற் றும் ஐ.நா. சாசனத்திற்கு எதிரான கடு மையான மீறலாகும். மேலும், இது உலகளாவிய அளவில் பதற்றங்க ளைத் தூண்டும். மேற்கு ஆசியாவை சீர்குலைக்கும். மேலும் கடுமையான பொருளாதார விளைவுகளை ஏற் படுத்தும். ஈரான் அணு ஆயுதத்தை உரு வாக்கும் விளிம்பில் இருப்பதாகக் கூறி அமெரிக்காவும் இஸ்ரேலும் தங் கள் தாக்குதல்களை நியாயப்படுத்து கின்றன. இருப்பினும், சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA- Inter- national Atomic Energy Agency) இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோசி ஜூன் 19 அன்று “அணு ஆயு தத்தை நோக்கி நகரும் ஒரு முறை யான முயற்சிக்கான எந்த ஆதார மும் எங்களிடம் இல்லை” என்று கூறி னார். ஈரான் அணு ஆயுதத்தை உரு வாக்கி வருவதற்கான உறுதியான ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என்பதை அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் கூட ஒப்புக்கொண் டுள்ளன. மேலும், அணு ஆயுத பர வல் தடை ஒப்பந்தத்தில் (NPT- Nuclear Non-Proliferation Treaty) ஈரான் கையெழுத்திட்டிருப்பது நீடிக்கிறது. வளங்களைக் கைப்பற்றவே ராணுவத் தாக்குதல் இவ்வாறு உண்மைகள் இருந்த போதிலும், ஈரானுக்கும் அமெரிக்கா விற்கும் இடையிலான எந்தவொரு சாத்தியமான பேச்சுவார்த்தைகளை யும் நாசமாக்க ஜூன் 12 அன்று இஸ் ரேல், ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது. இப்போது, பேச்சு வார்த்தைக்கு, அமெரிக்க ஜனாதி பதி டிரம்ப், இரண்டு வார கால அவ காசத்தை நிர்ணயித்து இருந்தா லும், அமெரிக்கா இந்த ஆக்கிர மிப்புச் செயலில் இஸ்ரேலுடன் இணைந்துள்ளது. இது அமெரிக்க - இஸ்ரேல் அச்சு தங்கள் சொந்த உள வுத்துறை மதிப்பீடுகள் அல்லது எந்த வொரு இராஜதந்திர செயல்முறை யையும் பொருட்படுத்துவதில்லை என்பதையும், ஈரான் மற்றும் முழு மேற்கு ஆசிய பிராந்தியத்தின் மீதும் போரை திணிப்பதில் அவர்கள் முனைப்புடன் இருப்பதையும் தெளி வாகக் காட்டுகிறது. ஈரானை அழிப் பது, மேற்கு ஆசியாவில் ஏகாதி பத்திய மேலாதிக்கத்தை நிறுவுவது மற்றும் உலகளாவிய வளங்களின் ஓட்டத்தை கட்டுப்படுத்துவது என் பதே உண்மையான நோக்கம் என்பதை இது தெளிவுபடுத்துகிறது. இந்த தாக்குதல் ராணுவ - தொழில் துறை வளாகத்தின் நலன்களுக்கு சேவை செய்வதையும், சர்வதேச மூலதனம் நீண்டகால நெருக்கடியிலி ருந்து வெளியேற வழிவகுப்பதை யும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பொய் குற்றச்சாட்டு பேரிலேயே முன்பு இராக்கிலும் தாக்குதல் ஈரான் மீது பதுங்கு குழிகளை உடைக்கும் குண்டுகளை வீச அமெ ரிக்கா B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமா னங்களை அனுப்பியது. இராக் படை யெடுப்பு பாணியை மீண்டும் செயல் படுத்தியது, அதுவும் இதேபோல் சரி பார்க்கப்படாத கூற்றுக்களின் அடிப்படையில் நடத்தப்பட்டது. பின் னர் அவை பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டன. இரண்டாம் உல கப் போரின் முடிவில் ஜப்பான் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருந்த போதிலும், அணு ஆயுதத்தைப் பயன்படுத்திய ஒரே நாடான அமெ ரிக்கா, இப்போது அணு ஆயுத அச்சு றுத்தல் பற்றிப் பேசுவது முரண் பாடாக இருக்கிறது! அமெரிக்காவின் தாக்குதல், எல்லா சாத்தியக்கூறுகளிலும், மோதலை கடுமையாக அதிகரிக் கும், உலகளாவிய அமைதிக்கும் சாதாரண மக்களின் வாழ்வாதா ரத்திற்கும் பேரழிவு தரும் தாக்கங் களை ஏற்படுத்தும் - குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகள், எண் ணெய் இறக்குமதி மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான வாய்ப்புகளுக்கு, மேற்கு ஆசியா வையே பெரிதும் நம்பியுள்ளன என்ற நிலையில், ஏற்கனவே சுமை யில் இருக்கும் உழைக்கும் மக்கள் போரின் பொருளாதார வீழ்ச்சியால் மிகவும் பாதிக்கப்படுவார்கள். அமெரிக்க - இஸ்ரேல் ஆதரவை இந்தியா கைவிட வேண்டும் இந்திய அரசாங்கம் உடனடியாக தனது அமெரிக்க ஆதரவு, இஸ் ரேல் ஆதரவு வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டைக் கைவிட்டு, போரை நிறுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளில் இணைய வேண்டும். இந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புச் செயலுக்கு எதிராக உடனடியாக எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்க மைக்குமாறு நமது அனைத்து பிரிவு களையும் நாங்கள் கேட்டுக்கொள்கி றோம், மேலும் நமது நாட்டின் அமை தியை விரும்பும் அனைத்து மக்க ளையும் அமெரிக்கத் தாக்குதலைக் கண்டிப்பதில் எங்களுடன் இணையு மாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூட்டறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. (ந.நி.)