districts

img

கலசலிங்கம் பல்கலை., பட்டமளிப்பு விழா

திருவில்லிபுத்தூர், பிப்.25- விருதுநகர் மாவட்டம், திரு வில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கலச லிங்கம் பல்கலைக்கழகத்தில் 35-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமையன்று நடை பெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் கே.ஸ்ரீதரன் தலைமை வகித்தார். இணைவேந்தர் அறி வழகி ஸ்ரீதரன், துணைத் தலை வர்கள் எஸ்.சசிஆனந்த், எஸ்.அர்ஜூன் கலசலிங்கம் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். துணை  வேந்தர் எஸ்.நாராயணன் ஆண்டறிக்கை வாசித்தார். ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் ஜி.சதீஸ் ரெட்டி,  பல்வேறு பாடப்பிரிவுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர் களுக்கு பதக்கங்களையும், 1,652 மாணவர்களுக்கு பட் டங்களையும் வழங்கினார். கனடா ஸ்பாஸியல் டி.என்.ஏ இன்பர்மடிக்ஸ் நிறு வனதுணைத் தலைவர் சுதர்சன் கோபாலன், பெங்க ளூரு ஜென்பேக்ட் நிறுவன துணைத் தலைவர் கருணா கரன் விநாயகம் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பல்கலைக்கழக இயக்குநர்கள், முதன்மையர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.