districts

img

கூடுதலாக நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்

பெரம்பலூர். மார்ச் 1-  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட  ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.    இக்கூட்டத்தில், விவசாய சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.  தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் பேசுகையில், பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் பட்டா வழங்க  வேண்டும், கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அனைவரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனுக்குடன் பதில் அளிக்க அறிவுறுத்தி யதோடு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில், அனைத்து துறை அலுவலர்களும் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் விளக்கம் அளித்தனர். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, சார் ஆட்சியர் சு.கோகுல் வேளாண்மை இணை இயக்குநர் செ.பாபு மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.