districts

img

30ஆவது நாளாக தொடரும் போராட்டம்

புதுச்சேரி, டிச. 8- புதுச்சேரி அடுத்து தொண்டமா நத்தத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் கண்ணாடி தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் கடந்த 10 ஆண்டு களுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்ற னர்.  ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு சார்பில் கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு நடைபெற்ற போராட்டத்தின் போது, நிரந்தர  தொழிலாளர்களை நிர்வாகம் சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்தது. இதை எதிர்த்து தொழிலாளர்கள் ஒட்டு மொத்தமாக பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்பிரச்சனையில் புதுச்சேரி தொழி லாளர் துறை அதிகாரிகள் தலையிட்டு பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் துணை நிலை ஆளுநருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது, ஆலை நிர்வாகம் பணி நீக்கம் செய்த தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்வதாக ஒப்புக் கொண்டது. ஒப்புக்கொண்டபடி பணி வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வந்தது. மீண்டும் பணி வழங்கக் கோரியும், ஊதிய  உயர்வை அறிவிக்கக் கோரியும், அரசின் உத்தரவுகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தொழிலாளர்கள் 30ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளனர்.