districts

அரசு அதிகாரியை ஒருமையில் பேசிய பாஜக எம்எல்ஏ

புதுச்சேரி,மார்ச்.8- புதுச்சேரியில் அமைச்சர் முன்னிலையில் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் துறை அதிகாரியை பாஜக எம்எல்ஏ ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்திருப்பது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.    புதுச்சேரி மாநிலத்தி லுள்ள வசதிபடைத்தவர்கள் தங்களது குடும்ப அட்டைக ளுக்கு பதில் கவுரவ அட்டை பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக துறையின் சார்பில் சில மாதங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தலை மையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமைப்பொருள் துறை அமைச்சர் சாய். ஜெ. சரவணன்குமார், சட்ட மன்ற உறுப்பினர்கள் கல்யாண சுந்தரம், ஜான்குமார், ராம லிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு  மற்றும் ஆதரவு சுயேட்சை உறுப்பி னர் சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. மிரட்டல் அப்போது, இணை இயக்குநர் ரவிச்சந்திரனை அமைச்சர்கள் முன்னிலை யில், சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் ஒருமை யில் பேசி மிரட்டல் விடுத்தார். இது அந்த துறையின் அதிகாரிகள் ஊழியர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சராக இருந்து கொண்டே பத்தாம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது, உழவர்கரை நகராட்சி ஆணையரை மிரட்டியது என சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.