districts

img

நாகோஜனஹள்ளி பேரூராட்சியில் சிபிஎம் வெற்றி

கிருஷ்ணகிரி, பிப்ரவரி 22- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் நாகோஜனஹள்ளி பேரூராட்சி யில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.கடல் வேந்தன் வெற்றி பெற்றார்.  போச்சம்பள்ளி வட்டம் நாகோஜனஹள்ளி பேரூ ராட்சியின் 9 ஆவது வார்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.கடல்வேந்தன் 184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரை விட 20 வாக்குகள் அதிகம் பெற்றார். அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. சிபிஎம் சார்பில் வெற்றி பெற்ற எம்.கடன்வேதனை மாவட்டச் செயலாளர் ஆர்.ஜி. சேகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரகாஷ், பர்கூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், போச்சம்பள்ளி வட்ட சிபிஎம் செயலாளர் சோமு, வார்டு பணிக் குழு பொறுப்பாளர் இலவரசன், மார்க்சிஸ்ட் கட்சி தேர்தல் பணிக் குழுவினர் பெரியசாமி,சாந்தமூர்த்தி, வெங்கடாசலம், கோபால், மாதலிங்கம், கோவிந்தசாமி, மற்றும் திமுக நிர்வாகி செல்வம் உட்பட அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.  இந்த பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக கூட்டணி 14 வார்டுகளை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவுக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்தது.