சேலம், அக்.23- கல்வி வளாகங்களில் மாணவர் பேரவை தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, கல்லூரி முதல்வர்களி டம் மாணவர் சங்கத்தினர் மனு அளித் தனர். கல்வி வளாகங்களில் ஜனநாயக முறையில் மாணவர் பேரவை தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, கல் லூரி முதல்வர்களிடம் மனு அளிப்பது என இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ் நாடு மாநிலக்குழு அறைக்கூவல் விடுத் தது. அதன்படி, இந்திய மாணவர் சங் கத்தின் சேலம் மாவட்டக்குழு சார்பில், பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், சேலம் அரசு கலைக் கல்லூரி முதல்வர், மேட்டூர் அரசு கலைக்கல் லூரி முதல்வர், ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல் வர், சேலம் சௌடேஸ்வரி கல்லூரி முதல்வர் ஆகியோரிடம் செவ்வாயன்று மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சே. பவித்ரன், மாவட்ட துணைத்தலைவர் கள் கோகுல், கீர்த்திவாசன், மாவட்ட துணைச்செயலாளர்கள் அபிராமி, டார்வின், மாவட்டக்குழு உறுப்பினர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண் டனர். கோவை இதேபோன்று, கோவை அரசு கலைக் கல்லூரி, புலியகுளம் மகளிர் அரசு கலைக்கல்லூரி முதல்வர்களிடம் இந் திய மாணவர் சங்கத்தினர் மனு அளித்த னர். இதில், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ஜுல்பி மற்றும் கிளை உறுப் பினர்கள் கலந்து கொண்டனர்.