districts

img

கூடுதலாக பிடித்தம் செய்த தொகையை திரும்ப வழங்கிடுக

நாமக்கல், அக்.18- கூடுதலாக பிடித்தம் செய்த தொகையை திரும்ப வழங்க வேண்டும் என, கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழி லாளர்கள் சங்கத்தின், பள்ளிபாளையம் பொன்னி சர்க்கரை ஆலை ஏரியா கமிட்டி நிர்வாகிகள் கூட்டம், குமார பாளையத்தில் வெள்ளியன்று மாநிலக் குழு உறுப்பினர் கோவிந்தன் தலைமை யில் நடைபெற்றது. சங்கத்தின் மாநி லத் தலைவர் இ.கே.முருகன், மாநிலச்  செயலாளர் சி.துரைசாமி, மாவட்டச் செயலாளர் குருசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், 2023 - 24 கரும்பு அரவை பருவத்திற்கு கரும்பு வெட்டும் கூலியை மாநில அளவில் தீர்மானித்து சர்க்கரை துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். தீர் மானிக்கப்பட்ட வெட்டுக்கூலியை, வாகன வாடகையுடன் சேர்த்து, சர்க் கரை ஆலைகள் கொடுத்து விட்டு, விவ சாயிகளின் கரும்பு பணத்தில் பிடித்தம் செய்து கொள்ள வேண்டும். அதாவது, 3 கி.மீ முதல் 10 கி.மீக்கு வெட்டுக்கூலி, வாகன வாடகை ரூ.572 முதல் ரூ.595  வரையிலும், 11 கி.மீ முதல் 20 கி.மீ.க்கு  ரூ.600 முதல் ரூ.642 வரையிலும், 21 கி.மீ முதல் 30 கி.மீ.க்கு ரூ.647 முதல் ரூ.690 வரையிலும், 31 கி.மீ முதல் 40 கி.மீ.க்கு  ரூ.695 முதல் ரூ.737 வரையிலும், 41 கி.மீ முதல் 50 கி.மீ.க்கு ரூ.741 முதல் ரூ.784  வரையிலும், 51 கி.மீ முதல் 75 கி.மீக்கு  ரூ.789 முதல் ரூ.909 வரையிலும் தீர்மா னிக்கப்பட்டது. சில சர்க்கரை ஆலை கள் வட கர்நாடகாவில், டன்னுக்கு ரூ.100  கூடுதலாகவும், தென் கர்நாடகாவில் ரூ.200 கூடுதலாகவும் பிடித்தம் செய்த னர். எனவே, கூடுதலான பிடித்தம் செய்த பணத்தை விவசாயிகளுக்கு வழங் கிடக்கோரி கல்புர்கி மாவட்டத்தில் உள்ள ரேணுகா சர்க்கரை ஆலை விவ சாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப் பட்டது. ரேணுகா சர்க்கரை ஆலை நிர் வாகம் ரூ.50யை விவசாயிகளுக்கு திரும்ப கொடுத்துவிட்டது. தமிழ்நாட்டி லும் இந்த முறையை அமல்படுத்த வேண்டும். இதுகுறித்து ஒன்றிய, மாநில  அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இது தொடர்பாக பொன்னி சர்க்கரை ஆலை  நிர்வாகம், திருச்செங்கோடு கோட்டாட் சியரிடம் மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.