districts

img

அவுட்சோர்சிங் முறையை கைவிடுக: வேட்டை தடுப்பு காவலர்கள் கோரிக்கை

சத்தியமங்கலம், அக்.18- அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண் டும் என, வேட்டை தடுப்பு காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலி கள் காப்பகத்தில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், சத்தியமங்கலம் வன கோட்ட அலுவலர் குலால் யோகேஷ் விலாசி டம் மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில், சத்தியமங்கலம் வனக்கோட்டத்திற்குட்பட்ட விளாமுண்டி, பவானிசாகர், சத்தியமங்க லம், டி.என்.பாளையம், தலமலை, கடம்பூர் ஆகிய 6 வனச்சரகங்களிலும் சுமார் 59 வேட்டை தடுப்பு காவலர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். இதில் பெரும்பாலானோர் பட்டி யல், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். எங்களில் பெரும்பாலானோர் ஐந்தாண்டு களுக்கும் மேலாக பணிபுரிந்து வருகி றோம். வனப்பாதுகாப்புப் பணியில் துறை யின் அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு ஏற்ப,  எந்தவித பணிப்பாதுகாப்பும் அற்ற நிலையி லும் கூட நாங்கள் சிரமத்தோடு, பணிகளை செய்து வருகிறோம். வேட்டை தடுப்புக் காவ லர்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து வருபவர்களை, பணிவரன் முறை செய்யப்படுவது போல, எங்கள் பணியி னையும் வரன் முறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் நாங்கள் பணிபுரிந்து வருகி றோம். இந்நிலையில், எங்களை வெளிமுக மைக்கு (அவுட்சோர்சிங்) மாற்றும் நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிமுகமைக்கு எங் களை மாற்றும் பட்சத்தில், எங்கள் பணி பாதுகாப்பற்றதாக ஆகிவிடுவதோடு, எதிர் காலத்தில் பணிவரன் முறைப்படுத்தல் என்ப தும் அறவே இல்லாததாகிவிடும். எனவே, வேட்டைத்தடுப்பு காவலர்களாகிய எங்களை  வெளி முகமைக்கு மாற்றாமல், தொடர்ந்து  தொகுப்பூதியத்திலேயே பணிபுரிய வாய்ப்ப ளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.