districts

img

மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.18– அதிகாரிகள் ஏற்றுக்கொண்ட உறுதி மொழியை நிறைவேற்ற வலியுறுத்தி, மக்களைத் தேடி  மருத்துவ ஊழியர்கள் வெள்ளி யன்று தமிழகம் தழுவிய ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் மக்களை தேடி மருத்துவத் திட் டத்தில்  13 ஆயிரம் ஊழியர்கள் பணி யாற்றுகின்றனர். 2 மணி நேர பணி என நிய மிக்கப்பட்ட ஊழியர்கள் 8  மணி நேரத்திற்கு மேலாக வேலை  வாங்கப்படுகின்றனர். துறை சார்ந்த பணி மட்டுமின்றி பிற துறை பணி களையும் செய்ய நிர்பந்திக்கப்படு கின்றனர். இவர்களுக்கு நாளொன் றுக்கு 183 ரூபாய் (மாதம் சுமார் ரூ.5500) ஊதியம் மட்டுமே வழங் கப்படுகிறது. அதேநேரத்தில் இந்த ஊதியத்தில் இருந்தே, உபகரண பராமரிப்பு, எழுதுப் பொருட்கள்,  போக்குவரத்து உள்ளிட்ட செலவு களை செய்து கொள்ள வேண்டும்  என்கிற நிலை உள்ளது. எனவே,  ஊதிய உயர்வு, அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் மக்களைத்தேடி மருத்துவ ஊழியர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதியாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் மகாலட்சுமி தலைமை வகித்தார். மாநிலச் செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சிஐ டியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, துணைத்தலைவர் பி.பாலன், துணைச்செயலாளர் ஒய்.அன்பு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற ஊழியர்கள் கூறுகையில், மாத ஊதியம் ரூ.5500யை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தற் போது ஊழியர்களுக்கு வழங்கும்  மாத ஊதியம், மிகவும் தாமதமாக வழங்கப்படுகிறது. மாதந்தோறும் 5 ஆம் தேதி ஊதியம் வழங்கி, ஸ்கோர் சீட் என்ற பெயரில் ஊதி யம் பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும். 2 மணி நேரம் என வேலை அமர்த்தி, 8 மணி நேரத்துக்கு மேலாகவும், பண்டிகை, வார விடு முறையின்றி வேலை வாங்குவதை முறைப்படுத்த வேண்டும். பணி வரன்முறை செய்ய வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் மகப்பேறு கால ஊதியத்துடன் கூடிய விடுப்பு, தற்செயல் விடுப்பு, தேசிய பண்டிகை விடுமுறையின் போது பணிக்கு வர நிர்பந்திக்கக் கூடாது. பணி காலத்தில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க பொறுப்பேற்க வேண்டும்.  மரணம் அடைந்த ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவா ரணம் வழங்க வேண்டும். இஎஸ்ஐ,  பிஎப் திட்டத்தை அமலாக்க வேண் டும். தீபாவளி பண்டிகை செலவுக்கு ஒரு மாதம் சம்பளம் முன்பணமாக வும், ஒரு மாத சம்பளம் ஊக்கத்  தொகையாகவும் வழங்க வேண் டும்.  ஆண்டுக்கு 2 செட் சீருடை, அடையாள அட்டை வழங்க வேண் டும். போக்குவரத்துப் படி, மலை பகுதிகளில் பணியாற்றும் ஊழியர் களுக்கு வன விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வாகன வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.  நாமக்கல் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் நிர்வாகி சத்யா தலைமை வகித் தார். ஆர்ப்பாட்டத்தை துவக்கி  வைத்து, அரசு ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் ஆர்.முருகேசன் பேசினார். கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு மாவட்டச் செயலா ளர் என்.வேலுச்சாமி பேசினார். இதில் விவசாய சங்க முன்னாள் செயலாளர் ஏ.ரங்கசாமி, மக்க ளைத் தேடி மருத்துவ ஊழியர் சங்க  ராசிபுரம் வட்டக்கிளை செயலாளர் ஸ்ரீதர், நிர்வாகிகள் லதா, மாலதி, ரூபிணி, சந்திரமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.