districts

img

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு அருவியில் குளிக்க 6 ஆவது நாளாக தடை நீட்டிப்பு

தருமபுரி, அக்.18- ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிக ரித்து வரும் நிலையில், அரு வியில் குளிக்க சுற்றுலாப் பய ணிகளுக்கு 6 ஆவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ்., கபிணி ஆகிய அணைகளுக்கு நீர்வ ரத்து அதிகரித்துள்ளதால், உபரிநீர் தமிழக  காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. மேலும் கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக் கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தருமபுரி மாவட் டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வியாழ னன்று நிலவரப்படி விநாடிக்கு 14 ஆயிரம்  கனஅடியாக இருந்த நிலையில், வெள்ளி யன்று காலை விநாடிக்கு 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள் ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண் ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நீர்வரத்து அதி கரித்து வந்ததால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் வெள்ளியன்று 6 ஆவது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள் ளது. இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், காவிரி ஆற்றின் கரையோரம் சுற்றுலா பயணி கள் குளிக்காதவாறு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.