திருப்பூர், அக். 25- உடுமலை பகுதி மலைகளில் வசிக்கும் மலை வாழ்மக்களுக்கு பட்டா வழங்க ஓராண் டுக்கும் முன்பே நில அளவீடு செய்தும் இதுவரை பட்டா வழங்காமல் இழுத் தடிப்பதாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்கூட்டம் ஆட்சியர் விஜயகார்த்தி கேயன் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில் விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: காளிமுத்து: சீனா, ஜப்பான், மலேசியா, ஆஸ்திரேலியா,நியூசிலாந்து உள்ளிட்ட மேலைநாடுகளில் இருந்து வேளாண் விலை பொருட்கள் மற்றும் பால் ஆகிய உணவு பொருட்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் வகையில் மத்திய அரசு ஒப்பந்தம் அமைத்து உள்ளது. இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் உள்ள விவசாயிகள் அனை வரும் தங்களது வாழ்வாதாரத்தை முற்றி லும் இழந்துவிடுவார்கள். ஏற்கனவே, இந்திய விவசாயிகள் கடன் சுமையாலும், கட்டுப்படியான விலை கிடைக்காமலும் நாள்தோறும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்திய விவசாயி களின் தற்போதைய நிலை கருதி, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் பொருட்களை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்தால் மானியமே கிடைக் காத இந்திய விவசாயிகள் பெரிதும் பாதிக் கப்படுவார்கள். ஆகவே மத்திய அரசு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இடக்கூடாது என தமிழக அரசு மத்திய அரசை வலியு றுத்த வேண்டும் என தெரிவித்தார்.
பழனிச்சாமி: மக்காச்சோளம், நெல் தற் போது பயிரிடப்பட்டு வருகிறது. இதற்கு யூரியா இல்லை. ஏற்கனவே மக்காச்சோள பயிர்கள் படைப்புழு தாக்குதலுக்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அலங்கியம் பகுதியில் நெல், மக்காச்சோளம் அறுவடை செய்தால் உலர வைக்க களம் இல்லை. உலர்களம் சேதம் அடைந்திருப்பதால், காய வைக்க இடம் இல்லை என்றார். ஈஸ்வரமூர்த்தி: அமராவதி அணை யில் இருந்து தண்ணீர் திறப்பது தொடர் பாக, சம்பந்தப்பட்ட பாசன சபை தலைவர் களை பொதுப்பணித்துறை அலுவலர்கள் அழைத்து பேசுவதில்லை. பொதுப்பணித் துறையில் அலுவலர்கள் காலியிடங்களும் ஏராளமாக உள்ளன. அமராவதி சர்க்கரை ஆலையில் கரும்பு அளித்த விவசாயிக ளுக்கு, ஜூன் 21-ஆம் தேதி வரை மட்டுமே பணம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாத காலமாக விவசாயிகளுக்கு வழங்க வேண் டிய தொகை வழங்கப்படவில்லை. தாரா புரத்தில் சில உரக்கடைகளில் அதிகமான விலைக்கு உரங்கள் விற்கப்படுகின்றன.
கோபால்: பொங்கலூர் பிஏபி வாய்க் காலில் தண்ணீர் திருட்டு தொடர்கிறது. பிர தான வாய்க்கால்களையே சேதப்படுத்தி, தண்ணீர் திருடும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அலுவலர் களிடம் புகார் அளித்தோம். ஆனால் போலீ ஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இத னால் பல இடங்களில் தண்ணீர் திருடப் படுகிறது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கச் செயலாளர் செல்வம்: பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உடு மலைப்பேட்டை மலை பகுதியில் 6 ஆயிரத் திற்கும் மேற்பட்ட புலையன், முதுவன், இரவா ளன், மலைவளசர் ஆகிய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். வன உரிமை சட்டத்துக்கு புறம்பாக அனுபவத்தில் உள்ள நிலத்துக்கு முழுவதும் பட்டா வழங்காமல் இரண்டு சென்ட், மூன்று சென்ட் குடியிருப்பதற்கு மட்டும் பெற்றுக் கொள்ளுங்கள் என நிர்பந்தம் செய்து ஆட்டு மலை, தளிஞ்சிவயல், கரட்டுபதி, கருமுட்டி ஆகிய குடியிருப்புகளுக்கு கட்டிடம் கட்டக்கூடாது என்ற நிபந்தனைகளோடு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டா வினால் எங்களுக்கு எந்த பலனும் இல்லை. ஆனால் எங்கள் குடியிருப்புக்கு மேலே இருக்கும் வால்பாறை பகுதிகளுக்கும், கேரளாபகுதி குடியிருப்புகளுக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள் ளது. எனவே நாங்கள் அனுபவித்துவரும் நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என்றார்.