மும்பை,ஜூன் 9- மும்பையில் ஓடும் ரயிலிலிருந்தௌ தவறி விழுந்து 5 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், தானே மும்ப்ரா ரயில் நிலையம் அருகே மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த புறநகர் ரயிலில் இன்று காலை 9.30 மணியளவில் கூட்ட நெரிசல் காரணமாக ஓடும் ரயிலில் இருந்து 12 பேர் தவறி விழுந்துள்ளனர்.
அதில் 5 பயணிகள் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.