tamilnadu

img

மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து சிபிஎம் பிரச்சாரம்

மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து சிபிஎம் பிரச்சாரம்

தருமபுரி, ஜூன் 11- மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதனன்று இருசக்கர வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண் டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை தமி ழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கட்சியி னர் புதனன்று மாநிலம் முழுவதும் பிரச் சார இயக்கத்தினை துவங்கியுள்ளனர். அதன்படி, தருமபுரி மாவட்டம், பாலக் கோடு வட்டத்தில் இருசக்கர வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது, நூறுநாள் வேலைதிட்டத்தை அனைத்து ஊராட்சிகளிலும் தொடர்ந்து செயல்படுத்தி, நகரங்களுக்கு விரி வுப்படுத்த வேண்டும். காவிரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக நிறை வேற்ற வேண்டும். பாலக்கோடு அரசு  மருத்துவமனையில் சிடி, எம்ஆர்ஐ  ஸ்கேன் கருவிகளை அமைக்க வேண் டும். மாங்காய் டன் ஒன்றுக்கு ரூ.30 ஆயி ரம் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த பிரச்சாரத்திற்கு கட்சியின் வட்டச்  செயலாளர் பி.கார்ல் மார்க்ஸ் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முத்து,  சி.நாகராசன், வே.விசுவநாதன் மற்றும்  வட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட  பலர் கலந்து கொண்டனர். பாலக்கோட் டில் துவங்கிய பிரச்சாரம் வெள்ளி  சந்தை, மாரண்ட அள்ளி உள்ளிட்ட  பல்வேறு கிராமங்களில் நடைபெற் றது.