விழுப்புரம், ஜூன் 11- தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் காணொளி காட்சி வாயிலாக மகளிர் சுய உதவிக்குழு தினவிழாவில் பங் கேற்றதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட் டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வங்கிக் கடன் மற்றும் அரசு நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டன. விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள்க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அ.சிவா, ச.சிவக்குமார் ஆகியோர் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வங்கிக் கடன் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி னர். இட்நத நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தஜெ.இ.பத்மஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா.வெங்கடேஷ் வரன், விழுப்புரம் நகர்மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ஷீலா தேவி சேரன், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் எஸ்.சுதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.