ஆம்பூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் நாகநாத சுவாமி கோவிலில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள ஸ்ரீ நாகநாத சுவாமி கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வரும் தியாகராஜன். இவர் அதே கோவிலில் தூய்மை பணிகளை மேற்கொள்ள வந்த பெண் ஒருவருக்கு, கடந்த ஒரு வருடமாக பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாகவும், பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார். இது தொடர்பாக அப்பெண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். இதை அடுத்து, அர்ச்சகர் தியாகராஜன் மீது 4 பிரிவுகளின் கீழ் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு நிலையில், தியாகராஜனுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளக்க நோட்டீஸ் ஜூன் 6-ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், புதுச்சேரியில் வைத்து அர்ச்சகர் தியாகராஜன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.