tamilnadu

img

பெண்கள் அரசு விடுதிகளில் பெண் காவலர்கள் நியமிக்க முடிவு - அமைச்சர் கீதா ஜீவன்

பெண்களுக்கான அரசு விடுதிகள் அனைத்திலும், இனி பெண் காவலர்களையே நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என சமூக நலன் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
சென்னை தாம்பரம் சானிடோரியம் அருகே அரசு மகளிர் சேவை இல்லத்தில் தங்கிப் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவியை, அங்கு காவலாளியாக வேலை செய்து வந்த மேத்யூ என்பவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
இது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இச்சம்பவம் மிக துரதிஷ்டவசமானது. குற்றம் சாட்டப்பட்ட காவலாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விடுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ள இருக்கிரோம். இனி, பெண்களுக்கான அரசு விடுதிகள் அனைத்திலும் பெண் காவலர்களையே நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்தார்.