புதுதில்லி,ஜூன் 9- சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மதுரை - தூத்துக்குடி சாலையில் புதூர் பாண்டியாபுரம், எலியார்பத்தி ஆகிய சுங்கச்சாவடிகளில் மாதம் ரூ.11 கோடி அளவுக்கு கட்டணம் வசூலித்துள்ள நிலையில் சாலைப் பராமரிப்புக்கு ரூ.30 லட்சம் மட்டுமே செலவு செய்துள்ளது ஏன் என்று கேள்வி எழுப்பியதோடு 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
தீர்ப்பை எதிர்த்து சுங்க கட்டண வசூலுக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக நெடுஞ்சாலைத்துறை மேல்முறையீடு செய்ததையடுத்து கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை இடைக்கால நீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.