சேலம், பிப். 24- சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைப்பதன் மூலம் 7 ஆயிரம் கோடி வரை உற்பத்தி செய் யப்படும் என அமைச்சர் ராஜேந்தி ரன் செய்தியாளர்களிடம் தெரிவித் தார். சேலம் அஸ்தம்பட்டி ஆய்வு மாளி கையில் அமைச்சர் ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசு கையில், தொழில் வளர்ச்சி ஏற்படுத் துவதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் ஜவுளி பூங்கா அமைக் கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் நடை பெற்று வருகிறது. சேலம் ஜாகிர்அம்மாபாளையம் பகுதியில் 119 ஏக்கர் நிலம் ஒதுக்கப் பட்டு பணிகள் சிப்காட் நிறுவனம் மூலம் மேற்கொண்டு வருகிறது. சேலம் மாவட்டம் நெசவாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் நேரடி யாக 15 ஆயிரம் பேரும் மறைமுக மாக 50 ஆயிரம் பேரும் வேலை வாய்ப்பு கிடைக்கும். நேரடியாக 15 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப் பில் 75 சதவீதம் மகளிர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதனால் ஆண்டிற்கு ரூ.7 ஆயி ரம் கோடி வரை உற்பத்தி செய்யப்ப டும். இதில் 75 சதவீதம் ஏற்றுமதி யும், 25 உள்ளூர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். இந்த ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைவதன் மூலம் நிறைய ஏற்றுமதிக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக 880 கோடியில் திருமணிமுத்தாறு கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம் அமைக்க உள்ளது. சேலம் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா பணிகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவுபெறும். சேலம் திருமணி முத்தாற்றில் செல்லும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, தண்ணீர் ஜவுளி பூங்கா பணிகளுக்காக பயன்படுத் தப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் திருமணிமுத்தாறு தூய்மையாகும். சேலம் திருமணி முத்தாறு கழிவுநீரை குழாய் மூலமாக எடுத்துச்சென்று மறுசுழற்சி செய்து ஜவுளி பூங்காவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். கொலுசு உற்பத்தியாளர்களுக் கான கட்டிடம் கட்டப்பட்டு நிறைவு பெறும் நிலையில் உள்ளது. சேலம் என்றாலே உருக்காலை என்ற நினைவு வருவது போன்று, சேலம் என்றாலே ஜவுளிபூங்கா என்று நினைவு வரும் அளவிற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில், ஜவுளி தொழில் சார்ந்த டையிங், வார்ப்பிங், ஆட்டோ லூம், கார்மெண்ட்ஸ் உள்ளிட்டவைகள் இடம் பெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதியில் உள்ள ஜவுளி தொழில் நடைபெறும் என்றார்.